நிறுவனங்கள் தமது ஊழியர்களின் “நேரத்தை” கண்காணிப்பதை நிறுத்திவிட்டு “திறனை” மதிப்பிட வேண்டும் – புதிய ஆய்வு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இன்றைய நவீன அலுவலக கலாசாரத்தில் வேலை செய்வது போல பாசாங்கு செய்தல் என்பது ஒரு புதி…

நிறுவனங்கள் தமது ஊழியர்களின் “நேரத்தை” கண்காணிப்பதை நிறுத்திவிட்டு “திறனை” மதிப்பிட வேண்டும் – புதிய ஆய்வு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இன்றைய நவீன அலுவலக கலாசாரத்தில் வேலை செய்வது போல பாசாங்கு செய்தல் என்பது ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.

‘Software Finder’ நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு, குறிப்பாக ‘Gen Z’ ஊழியர்கள் மத்தியில் இந்த அழுத்தம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் நிறுவனங்களில் தொழில் புரியும் சுமார் 1000 பேரிடம் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 80 வீதமானோர் Gen Z ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 80 வீதமான Gen Z ஊழியர்கள் வேலை முடிந்த பின்னரும் வேலை செய்வது போல நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் “பயம்” என ஆய்வில் தெரியவந்துள்ளது.

“தான் விரைவாக வேலையை முடித்துவிட்டால், மேலாளர்கள் தன் மீது அதிக வேலையைச் சுமத்துவார்கள்” அல்லது “நான் சோம்பேறியாக இருக்கிறேன் என்று நினைப்பார்கள்” என்ற பயம் Gen Z தலைமுறையினரிடம் இருப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.

மேலாளர்களின் பார்வையில் தாங்கள் வேலை பழுவுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஊழியர்கள் கணினி சுட்டியை (Computer Mouse) தானாகவே நகர்வது போலச் செய்து, கணினி ‘Active’ நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர்.

வேலை முடிந்தாலும், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், சிறிது நேரம் கழித்து பதில் அனுப்புதல்.

அலுவலக வேலை தொடர்பான பல இணையதளப் பக்கங்களைத் திறந்து வைத்து, வேலையாக இருப்பதைப் போலக் காட்டுதல் ஆகிய முறைகளை பின்பற்றுவதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வானது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் “நேரத்தை” கண்காணிப்பதை நிறுத்திவிட்டு, அவர்களின் “திறனை” மதிக்கத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

ஊழியர்கள் பயமின்றி, தங்கள் பணிக்கான மதிப்பைப் பெற்றுத் திருப்தியுடன் வேலை செய்யும் சூழலே ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதே இந்த ஆய்வின் நோக்கம் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.