ஓய்வூதியத் திணைக்களத்தினால் விசேட இணையவழி விழிப்புணர்வு செயலமர்வுத் தொடர் இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அடுத்த ஆறு…
ஓய்வூதியத் திணைக்களத்தினால் விசேட இணையவழி விழிப்புணர்வு செயலமர்வுத் தொடர் இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள ஊழியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்வதற்கும், உரிய காலத்தில் ஓய்வூதியப் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான வழிகாட்டல்கள் இந்த அமர்வுகளில் வழங்கப்படும்.
ஒவ்வொரு அரச ஊழியரும் தாமதமின்றி ஓய்வூதியத்தைப் பெறுவது அவர்களின் உரிமையாகும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெறும் அதிகாரிகள் தமது ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித சிரமங்களுமின்றித் தொடங்குவதற்கு இந்த முயற்சி பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

