பாதங்கள் நமது உடலின் மிக முக்கியமான அடிப்பகுதியாகும். இவை உடலின் முழு எடையையும் தாங்கி, நாம் சமநிலையாக நிற்பதற்கும் நடப்பதற்கும் உதவுகின்றன. உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை முன்கூட்டியே எச்சரிக்கும் தன்மை பாதங்களுக்கு உண்டு. உபாதைகள் பாதங்களில் உள்ள நரம்புகள் உடலின்…
பாதங்கள் நமது உடலின் மிக முக்கியமான அடிப்பகுதியாகும். இவை உடலின் முழு எடையையும் தாங்கி, நாம் சமநிலையாக நிற்பதற்கும் நடப்பதற்கும் உதவுகின்றன.
உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை முன்கூட்டியே எச்சரிக்கும் தன்மை பாதங்களுக்கு உண்டு. உபாதைகள்
பாதங்களில் உள்ள நரம்புகள் உடலின் மற்ற அனைத்து உறுப்புகளுடனும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதங்களில் வெடிப்பு ,வீக்கம்,எரிச்சல் என்பன ஏற்றப்படுவது மனித உடலில் வேறு உபாதைகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
பாதங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவில்
ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருப்பதை உணர்த்தலாம்.
எனவே பாதங்களை பராமரிக்க இதோ சில வழிமுறைகள்
வெளியில் சென்று வந்தவுடனும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்றாகக் கழுவ வேண்டும். இல்லையேல் விரல் இடுக்கில் சேற்றுப் புண்கள் உருவாக வாய்ப்புள்ளது.
பாதங்கள் வறண்டு போகாமல் இருக்க, இரவில் தூங்குவதற்கு முன் நல்ல ஈரப்பதமூட்டும் கிரீம் அல்லது வெசிலின் (Vaseline) தடவலாம்.
வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும் சரியான காலணிகளைத் தேர்ந்தெடுத்து
அணியுங்கள்.
ஒரு நாளைக்கு மூன்று லீட்டர் தண்ணீர் அருந்துங்கள்.

