மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னை நிலத்தை 6 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு…
மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னை நிலத்தை 6 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த உத்தரவுகள் இன்று (21) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது மாத்தறை பிரதான நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டன.

