பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக 'வடக்கின் அரசன்' என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்பதற்கான இறுதிப் படிமுறை நிறைவடைந்துள்ளது. விசேட மாநாட்டில் உரையாற்றிய ஆண்டி பர்ன்ஹாம்,…

பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக 'வடக்கின் அரசன்' என்று அழைக்கப்படும் ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்பதற்கான இறுதிப் படிமுறை நிறைவடைந்துள்ளது.

விசேட மாநாட்டில் உரையாற்றிய ஆண்டி பர்ன்ஹாம், தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.முக்கிய நோக்கம்

மேலும், இத்தனை காலம் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் தனது ஆட்சி அமையும் என்றும், நாட்டை ஒன்றிணைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

லண்டனில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்தானியாவின் பிற பிராந்தியங்களுக்கும் பரவலாக்குவதே தனது முக்கிய நோக்கம் என்று பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிராந்தியங்களுக்கு இடையேயான சமத்துவமின்மை குறைக்கப்பட்டு, மக்களின் கோபத்திற்குத் தீர்வு காண முடியும் என்று அவர் நம்புகிறார்.பொதுத்தேர்தல்

பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்க 'ரிஃபார்ம் யூகே' கட்சியின் எழுச்சியைத் தடுக்கும் நோக்கில் பர்ன்ஹாமின் இந்த வியூகம் அமைந்துள்ளது. நைஜல் ஃபரேஜ் தலைமையிலான ரிஃபார்ம் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட தொழிற்கட்சி இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ள நிலையில், பர்ன்ஹாம் தனது நீண்டகாலத் திட்டங்களை மிக விரைவாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.