புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை காலால் உதைத்து விழுத்தி பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவம் தொடர்பில் தற்போது காணொளி ஒன்று பகிரப்பட்டு…
புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை காலால் உதைத்து விழுத்தி பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவம் தொடர்பில் தற்போது காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. குறித்த காணொளியில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். கடுமையான தாக்குதல்கள்.. மேலும் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிபடுத்தியுள்ளார். அதேநேரம், சம்பவத்தின் போது பொலிஸார் மதுபோதையில் குறித்த இளைஞர்களை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், இதுவரை பொலிஸில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தாக்கியதாக கூறப்படும் அதிகாரிகள் இளைஞர்களின் வாகனங்களை வழிமறித்த போது நிறுத்தாமையினாலேயே தாக்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

