ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த மத்திய மாகாண ஆளுநர்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்…
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த மத்திய மாகாண ஆளுநர்!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகின்றது. இப்பதவியில் இருந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும்.
அந்தப் பதவியின் தற்காலிகப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

