உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாப் தியாவ் சனிக்கிழமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 19 மாதங்களாக இப்பதவியில் நீடித்து வந்த 45 வ…

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் செனகல் தேசிய அணி மிக மோசமாகச் செயல்பட்டு நாக்-அவுட் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாப் தியாவ் சனிக்கிழமை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 19 மாதங்களாக இப்பதவியில் நீடித்து வந்த 45 வயதான பாப் தியாவ், உலகக் கிண்ணத்தில் செனகல் அணியை வலுவான நிலைக்குக் கொண்டு செல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.கால்பந்து இறுதிப்போட்டி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான கால்பந்து

இறுதிப்போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி செனகல் சாம்பியன் பட்டம் வென்றதால், நடப்பு உலகக் கிண்ணத்தில் அந்த அணி ஒரு முக்கிய சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் நோர்வே அணிகளிடம் செனகல் அடுத்தடுத்து தோற்றது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற 32 அணிகளுக்கான நாக்-அவுட் சுற்றில், பெல்ஜியம் அணிக்கு எதிராக ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் வரை 2-0 என செனகல் முன்னிலையில் இருந்தது.

எனினும், கடைசி நேரத்தில் சொதப்பியதால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்று, இறுதியில் 3-2 என்ற கணக்கில் செனகல் பரிதாபமாகத் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.நடுவர் பெனால்டி

இந்தத் தோல்விகளே பயிற்சியாளர் நீக்கத்திற்குக் முதன்மைக் காரணமாகக் கூறப்படும் வேளையில், தியாவ் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கான 5 போட்டிகள் தடை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 ஏஎஃப்சிஓஎன் இறுதிப்போட்டியின் போது மொராக்கோவுக்கு நடுவர் பெனால்டி வழங்கியதை எதிர்த்து, இவர் தனது வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறச் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, செனகலின் டாக்கார் நகரில் பிறந்து, பிரான்ஸ் நாட்டுக்காக உலகக் கிண்ணம் வென்று தந்த புகழ்பெற்ற முன்னாள் வீரர் பேட்ரிக் வியேரா செனகல் அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.