இந்த வருட சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் துரிதமாக ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த நெல் கொள்முதல் பணிகளுக்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபாய் நிதி நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டு…

இந்த வருட சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் துரிதமாக ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த நெல் கொள்முதல் பணிகளுக்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபாய் நிதி நேரடியாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.இது தவிர, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், அரச வங்கிகள் ஊடாக மேலதிகமாக 10 பில்லியன் ரூபாய் கடன் தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த நெல் கொள்முதல் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாவட்ட செயலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.