சுகாதார அமைச்சின் மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 228 பொது சுகாதார மேலாண்மை உதவியாளர்களுக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ…

சுகாதார அமைச்சின் மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 228 பொது சுகாதார மேலாண்மை உதவியாளர்களுக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. சுகாதாரத் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, ஜூலை 4ஆம் திகதி மேல் மாகாணத்திற்காக 627 சுகாதார சேவைகள் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஜூலை 18ஆம் திகதி மேலும் 600 பேருக்கும், ஓகஸ்ட் முதலாம் திகதி 762 சுகாதார சேவைகள் உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 295 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் 121 மேற்பார்வையாளர்களையும் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலவச சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், மருத்துவமனைகளின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.