கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகாண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 20 மாணவர்கள் உயிரிழப்பு கப்சோர்வா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த…

கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகாண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

20 மாணவர்கள் உயிரிழப்பு

கப்சோர்வா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை ஊழியர்களும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தான் விபத்திற்கு காரணம் என்றும் செக்வாடிட் மலைக்கு அருகிலுள்ள சாலையின் ஒரு பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடியும் வரை பாடசாலை கல்விச் சுற்றுலாக்கள் ரத்து செய்யப்படும் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.