நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத் துறையில் இருந்த ஹெந்த வித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வலையொளி தளமொன்று…

நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத் துறையில் இருந்த ஹெந்த வித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள், சலேவின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு 9,000 மட்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் நடக்கும் முறையை வைத்து நான் ஒரு ஆய்வு செய்தேன்.தனியாக செய்த ஆய்வுகிழக்கில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஊகிப்பு, தாக்குதல் வியூகம் , எந்தப் பக்கத்தைப் பாதுகாத்துத் தாக்குகிறார்கள், பங்கர்களை எப்பக்கத்தில் அமைத்துக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை நன்கு ஆய்வு செய்தேன். யாழ்ப்பாணம் முகமாலையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இப்படி நான் கணக்கிட்டுப் பார்த்தபோது, இது நிச்சயமாக 30,000-க்கும் அதிகம் என்று எனக்குப் புரிந்தது. இந்த 9,000 அல்லது 10,000 பேரைக் கொண்டு இவர்களுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்த முடியாது. குறைந்தபட்சம் 30,000 பேராவது இருக்க வேண்டும் என்பதுதான் எனது கணிப்பு. சிறிது காலம் கழித்து இக்பால் அதாஸ் என்ற புலனாய்வு ஊடகவியலாளர் அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 பேர் இருப்பதாக ஒரு கட்டுரை எழுதினார். அப்போதுதான் நான் இதுதான் சரியான எண்ணிக்கை என்று தெரிந்து கொண்டேன். எனவே இவர்களால் எந்தப் பயனும் இல்லை, பொய் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறது என்று கூடத் தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றிய புரிதலும் இல்லை. அதனால்தான் நான் ஹெந்த விதாரன- சுரேஷ் சலேவை நீக்கினேன். பின்னர் கோட்டாபய ராஜபக்ச இவர்களைச் சேர்த்துக் கொண்டு, கொழும்பில் உளவுத் தகவல் கூட்டம் என்று நடத்தி, கொழும்பு உளவு வேலையை கோட்டாபய தான் ஹெந்தவிதாரன மற்றும் சலேவுடன் இணைந்து தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயற்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகப் போரிட்டு உன்னதமான சேவை செய்த, சிறந்த உளவுத்துறைத் தலைவர் என்றுதானே சொல்கிறார்கள்? இவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு உன்னதமான சேவை செய்தவர்கள்.ஈழம் போரின் நான்காம் கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.