தெளிவான நடைமுறை வழிகாட்டி அவசியம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கட்டாயத் தொழிலாளர் உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்யும் புதிய வர்த்தமானி விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப…
தெளிவான நடைமுறை வழிகாட்டி அவசியம்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
கட்டாயத் தொழிலாளர் உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்யும் புதிய வர்த்தமானி விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தெளிவான செயற்பாட்டு கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும் என இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL) வலியுறுத்தியுள்ளது.
புதிய விதிமுறைகளுக்கான செயற்பாட்டு வழிகாட்டுதல்கள் இதுவரை வெளியிடப்படாததால், வர்த்தகத் தாமதம், கூடுதல் செலவுகள் மற்றும் நிர்வாக சுமைகள் ஏற்படக்கூடும் என சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் ஆலோசித்து, அபாய அடிப்படையிலான அமலாக்க முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சுங்கத்துறை முழுமையான நடைமுறை வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்றும் EASL கோரியுள்ளது.

