அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்…

அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத்தீயினால் ஏற்படும் புகையில் 'PM2.5' என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்கள் (fine particulate matter) உள்ளன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களின் மிகச்சிறிய துகள்களைக் கொண்ட இவை மனித திசுக்களுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், சில பகுதிகளில் காற்றின் தரம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது என்பதிலிருந்து மிகவும் ஆரோக்கியமற்றது என்பது வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.