திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டபூர்வ அனுமதியற்ற முறையில் கட்டிடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலை ஒன்றை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு அக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நேற்று (08.07.2026) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற…

திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டபூர்வ அனுமதியற்ற முறையில் கட்டிடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலை ஒன்றை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு அக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நேற்று (08.07.2026) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்கைத் தொடர்வது சிக்கலானது இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர் என்று வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்து மூலமான சம்ர்ப்பணத்தை சமர்ப்பித்தார்.

இதேவேளை தாமும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாக ஏனைய எதிராளிகள் தரப்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட வழக்கறிஞர் சஞ்ஜீவ வீர விக்ரம வாதங்களை முன்வைத்தார்.இதனை கருத்தில் கொண்ட திருகோணமலை பிரதம நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் இது தொடர்பாக எழுத்துபூர்வமான சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி வழக்கை அக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.சாட்சியங்களை முன்வைத்த வழக்கறிஞர் சஞ்சீவ வீர விக்ரம, வழக்குக் கோப்பில் உள்ள ஆவணங்கள் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆவணங்கள் மட்டுமே என்றும் பிக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பௌத்த விவகார ஆணையரிடமிருந்தோ அல்லது புத்த சாசன அமைச்சகத்திடமிருந்தோ எந்த ஆவணங்களும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.புத்த சாசனத்தைக் கையாளும்போது, ​​அதன் பாதுகாப்பு மற்றும் பேணல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்க அதிகாரிகள் அறிந்து கொள்ளாத நிலையில் இந்த வழக்கைத் தொடர்வது சிக்கலானது என்றும் தமது வாதத்தை மன்றில் முன்வைத்தார். நீதிமன்றத்தில் முன்னிலையாகாத எதிராளிகள்இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, தமது தரப்பு சமர்ப்பணங்களை எழுத்து பூர்வ அறிக்கையாக மன்றிற்கு முன்வைக்க வாய்ப்பளித்து, வழக்கை அக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.மேலும், இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகாத எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் பொலிஸாருக்கு  உத்தரவிட்டார்.

எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட வழக்கறிஞர்களான கிரிஷாந்த நிஸ்ஸங்க, சஞ்சீவ வீரவிக்ரம, மனோஜ் அரவிந்த செபாஸ்டியன், கலன பின்னடுவ ஹெவா ஆகியோர் முன்னிலையானார்கள்.அதேவேளையில், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோரப் மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சார்பில் அதன் சட்ட அதிகாரி பாஞ்சாலி பெர்னாண்டோ, கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி அதிகாரி சு.தீபராஜ் ஆகியோர் முன்னிலையானார்கள்.பொலிஸ் தரப்பில் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம இன்ஸ்பெக்டர் சசங்க குமார சமரசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.