மேலதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவுகள் கிடைத்திருந்தால் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கலவரம் தொடர்பான நிலைமையை இன்னும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் சம்பவ…

மேலதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவுகள் கிடைத்திருந்தால் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கலவரம் தொடர்பான நிலைமையை இன்னும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின்போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று(08.07.2026) வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்றது.நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் அதன்போது நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறை அதிகாரிகள்,

இதுபோன்ற அவசர நிலையில் உடனடி முடிவுகளை எடுப்பதற்கும், அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதற்கும் இருந்த சட்ட மற்றும் நிர்வாகத் தடைகளால்தான் இந்தப் பிரச்சினைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உரிய நேரத்தில் மேலதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவுகள் கிடைக்கப்பெற்றிருந்தால் இதனை விரைவாகவும், சிறப்பான முறையிலும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.