நெதர்லாந்தின் த ஹேக் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அமெரிக்கக் குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய வழக…
நெதர்லாந்தின் த ஹேக் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அமெரிக்கக் குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட 'டான்' மனித உரிமைகள் அமைப்பு மற்றும் 'இனப்படுகொலைக்கு எதிரான வரி செலுத்துவோர் கூட்டணி' (TAAG) ஆகிய அமைப்புகள் இணைந்து புதன்கிழமை இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைகளுக்குப் பதிலடியாக, கடந்த 2025 பெப்ரவரியில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஐ.சி.சி அதிகாரிகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இந்தத் தடைகளின் கீழ், ஐ.சி.சி வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஆதாரங்களை வழங்கிய சில பாலஸ்தீன அமைப்புகள் மட்டுமின்றி, பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளுக்காகப் பேசும் அமெரிக்கக் குடிமக்களின் பேச்சுரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சர்வதேச நீதிமன்றத்திடமோ அல்லது வெளிநாட்டு உரிமை ஆர்வலர்களிடமோ அமெரிக்கர்கள் தொடர்புகொள்வதையும், தங்களது கருத்துகளைப் பகிர்வதையும் இந்த தடைகள் தடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை மேலும், இந்தத் தடைகள் தகவல் பரிமாற்றங்களை முடக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் 1977-ஆம் ஆண்டின் அமெரிக்காவின் 'சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்திற்கு' எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஐ.சி.சி நீதிமன்றத்தை முற்றிலும் முடக்குவதற்கு அமெரிக்க அரசு தீவிரமாகச் செயல்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், இந்த புதிய சட்டப் போராட்டம் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

