எதிர்காலத்தில் வாகன இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, வாகன இலக்…
எதிர்காலத்தில் வாகன இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் புதிய வாகனப் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த ஜூன் 8, 2026 அன்று வெரஹெரவிலுள்ள திணைக்கள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தற்காலிக இடைநிறுத்தம் இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மில்லியன் இலக்கத் தகடுகள் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலுவையை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.வெரஹெர அலுவலகம் தற்போது இரு கட்டங்களாகத் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் நேரத்தில் அச்சிடப்படும்.
நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இரவு நேரத்தில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும்.

