வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நாட்டில் வாகனத் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போ…
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நாட்டில் வாகனத் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வருமானம் குறையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதிக்கு பின்னர், வாகன இறக்குமதிக் கொள்கையை நீட்டிப்பதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதல் கட்டணங்கள் விதிக்க முடியாது.. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி, கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்தக் கூடுதல் கட்டணங்களை நீக்கினால் சந்தையில் மற்றொரு அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில் இருந்த வலுவான வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாலும், இறக்குமதியாளர்களும் தேவையான எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்துவிட்டதாலும், வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருவாய் கடந்த ஆண்டின் அளவை எட்டாது.
வாகனங்கள் மீது ஏற்கனவே 150% மற்றும் 200% போன்ற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற வரிகளை மேலும் விதிப்பது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய தனநாத் பெர்னாண்டோ, ஒரே பிரிவினர் மீது தொடர்ந்து வரிகளை விதித்து அரசு செலவினங்களைச் சுரண்டாமல், அவற்றை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றி வலுவான சமிஞ்சையை சந்தைக்கு வழங்கும் என்றும் பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.

