வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலத…

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணை

சந்தேக நபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.