வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பக் குறியீடு' (Heat Index), இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட…

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பக் குறியீடு' (Heat Index), இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' (Caution Level) எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைஅதன் படி, வட மாகாணம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாகிழக்கு மாகாணம்: மட்டக்களப்பு, அம்பாறை

ஊவா மாகாணம்: மொனராகலை

தென் மாகாணம்: அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் சில இடங்களில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதகாலும், வெளியில் நடமாடுவதாலும் அதிக சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.