கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்…
கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாரத்தில் புதன்கிழமை மாத்திரம் வடக்கு நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையில் இருக்காது என தொடருந்து திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாட்கள் மாத்திரம் தொடருந்து சேவை பழுதடைந்திருக்கும் தொடருந்து இயந்திரம் ஒன்றை விரைந்து திருத்துவதன் மூலம் வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் புதன்கிழமைகளிலும் வழமை போன்று இந்தச் சேவையை நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக தொடருந்து சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடருந்து நிர்வாகத்தின் முன்னைய அறிவிப்பில் இந்த வாரம் முதல் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் தொடருந்து சேவையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையடுத்து, இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்திய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சேவையை இயன்றளவு வழமை போன்று நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்தச் சேவையை புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் உள்ள மற்ற ஆறு நாட்களும் சேவையில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் உற்சவ காலம்
அடுத்த மாதம் நல்லூர் உற்சவகாலம் வருவதையொட்டி புதன்கிழமை சேவையையும் வரும் 20ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு முழு அளவில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
காலையில் கல்கிஸை பகுதியில் இருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டை வழியாக யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் நாகராந்திர கடுகதி சேவை, மதியம் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு முன்னிரவில் கல்கிஸையைத் திரும்பிச் சென்றடையவுள்ளது.
இதுவரையில் தினசரி நடைபெற்ற இந்தச் சேவை தற்போது புதிய ஒழுங்கின்படி புதன்கிழமை மாத்திரம் நடைபெறாது என்றும் புதன்கிழமை சேவையும் விரைவில் மீள நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

