வத்தளையை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்த மன்னார் மேல் நீதிமன்றம்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -மன்னார் நிருபர்- 5 கிராமுக்கும் அதிகமாக ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின்…

வத்தளையை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்த மன்னார் மேல் நீதிமன்றம்!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

-மன்னார் நிருபர்-

5 கிராமுக்கும் அதிகமாக ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி (01-07-2026) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட வத்தளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர்.

அதேநேரம் அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

இவ்வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த நீதிபதி, குறித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது