முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ம…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த பட்டம்

மேலும்,'KGF' திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.