தற்போதைய வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பநிலை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய வறண்ட வானிலை முடிவுக்கு வந்து,எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மட்டுமே போதுமான மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் என்று…

தற்போதைய வறண்ட வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உடல் வெப்பநிலை உயர்ந்த மட்டத்தில் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய வறண்ட வானிலை முடிவுக்கு வந்து,எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மட்டுமே போதுமான மழைப்பொழிவை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்கள்தின் முன்னறிவிப்புப்பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.உடல் வெப்பநிலை கணிசமாக அதிகரிப்பு

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் உடல் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளியில் செல்லும்போது இலேசான ஆடைகளை அணியுங்கள். அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு, முடிந்தவரை அதிக தண்ணீர் குடியுங்கள்.

நோயுற்றவர்கள் மற்றும் முதியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள். தென்மேற்குப் பருவக்காற்று தற்போது நாடு முழுவதும் வீசி வருகிறது.

அதன்படி, இன்று (13) மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல சுற்று மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இருப்பினும், அடுத்த சில நாட்களில் மழையின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்றின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும்.வறண்ட வானிலை தொடரும்..! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டெம்பர் மாதம் வரை வறண்ட வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் இப்பகுதிகளில் மழை குறைவது இயல்பானது என்றாலும், 'எல் நினோ' நிலை காரணமாக அது மேலும் தீவிரமடையக்கூடும். "இந்த ஆண்டு எல் நினோ நிலையின் உச்சகட்ட தாக்கத்தை நாம் இன்னும் காணவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் அதன் வளர்ச்சியை கவனிக்கலாம்.

இருப்பினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த எல் நினோ நிலை வலுவான நிலையை அடைய 80% க்கும் அதிகமான நிகழ்தகவு உள்ளது. அதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை தொடரும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எல் நினோ நிலையின் தாக்கத்தால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது என்று மேலும் எச்சரிக்கின்றது.