ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு சிறுபொழுத…
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சூழலுக்கு உகந்த மாற்று வழிஇது தொடர்பான அறிவிப்பில் மேலும், குறித்த போத்தல்களுக்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.விசேட திட்டங்கள் நடைமுறை அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.











-559804_850x460.jpg)
