நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னி…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலுக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளது என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.நாமலின் கோரிக்கை.. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (4) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை முதலில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கு பதிலளித்த ராஜபக்ச, அறிவிப்பு விடுக்கப்பட்ட மறுநாள் தன்னால் முன்னிலையாக முடியும் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு, அதனைத் தொடர்ந்து வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வத் தகவல் மூலம், அவர் முதலில் திட்டமிடப்பட்ட திகதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்குத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காகப் பெரிய ரக விமானக் குழுமத்தைக் கையகப்படுத்தியது தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

