காதலர்கள் போல் நாடகமாடி நீண்ட காலமாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர், 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினர் என தெரிவிக்கப்ப…

காதலர்கள் போல் நாடகமாடி நீண்ட காலமாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு தம்பதியினர், 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.போதை பொருள்

பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, காதலர்கள் போல பாசாங்கு செய்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை சோதனையிட்டபோது, போதை பொருள் விற்பனையால் சம்பாதித்த 1000 ரூபா பணத்துடன், 80 போதை மாத்திரைகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞர் இதற்கு முன்னரும் போதை பொருள் கடத்தல் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினர் நீண்ட காலமாக இந்த கடத்தலை தங்கள் வாழ்வாதாரமாக நடத்தி வந்துள்ளனர், மேலும் பாடசாலை மாணவர்களும் பெண்களும் கூட இவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கியுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. யாரும் சந்தேகப்படாத வகையில் தனிமையான இடங்களில் காதலர்கள் போல தங்கியிருந்து இவர்கள் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர், மேலும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.