பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள், 13…

பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள், 13 வயதுடைய சிறுவன் ஆகிய நால்வரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த அலை மற்றும் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, 35 வயதுடைய பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், 13 வயதுடைய சிறுவன் இன்னும் காணாமல் போயுள்ளதுடன், அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.