இலஞ்சம், ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் பத்து மகன்கள் மீது, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல…

இலஞ்சம், ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் பத்து மகன்கள் மீது, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல விசாரணை அமைப்புகள் ஆகியவை இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. மேலும், பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த அமைச்சர்களின் பல மகன்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரகசிய தொடர்புகள்.. இந்த நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் மூன்று மகன்கள், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதாள உலகத்துடனான தொடர்புகள் குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டவர், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்ச.

முந்தைய அரசாங்கங்களின் போது, ​​பல அமைச்சர்களின் மகன்கள் தங்கள் தந்தையரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊழல்களையும் முறைகேடுகளையும் செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.முக்கிய ஆதாரங்கள் சில சம்பவங்களில் முன்னாள் அமைச்சர்களின் தந்தையர்கள் நேரடியாக உதவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, அந்த முன்னாள் அமைச்சர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த நபர்கள் குறித்து மேலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களான தங்கள் தந்தையர்களின் ஆதரவுடன் பல்வேறு பதவிகளை வகித்தபோது, ​​சில அமைச்சர்களின் மகன்கள் பலவிதமான ஊழல்களையும் முறைகேடுகளையும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் குழுவினர் மீதும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.