கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷெஹான் தாரகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கரடியானா குப்பைக்…

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷெஹான் தாரகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கரடியானா குப்பைக்கிடங்கிற்கு முன்னால் உள்ள ஆற்றில், முதலை உண்ட நிலையில் சடலம் மிதப்பதை அப்பகுதி பணியாளர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், சடலம் முதலையின் பிடியில் இருந்ததால் அதனை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.