நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் வெள்ள நீரில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் வெள்ள நீரில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாரிய வெள்ள அழிவுக்கு மத்தியில் ஒரு குடும்பம் அதிசயமாக உயிர்தப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வேகமாகப் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் சூழப்பட்ட பச்சை நிற வீடொன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அந்த வீட்டிற்குள் குடும்பமொன்று சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை வெளியிட்டிருந்தனர்.
வெள்ள நீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்துகொண்டிருந்தபோது, வீட்டைச் சுற்றியிருந்த பல கட்டடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
எனினும், கடுமையான வெள்ளப்பெருக்கின் தாக்கத்தையும் தாங்கிக்கொண்டு குறித்த பச்சை நிற வீடு மட்டும் நிலைத்து நின்றது. இதனால், வீட்டின் கட்டுமான உறுதித்தன்மை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.
சுற்றியிருந்த கட்டடங்கள் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், இவ்வளவு சக்திவாய்ந்த வெள்ளத்தையும் அந்த வீடு எவ்வாறு தாக்குப்பிடித்தது என பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, பின்னர் வெளியான மற்றொரு காணொளியில், குறித்த வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக உயிர்தப்பியமை தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் கோரத்தையும் அதற்கு மத்தியில் அந்த வீடு தாக்குப்பிடித்த விதத்தையும் வெளிப்படுத்தும் இந்த இரண்டு காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












