பல குறைபாடுகள் மற்றும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 23 ஆம் நுவரெலியா, ஹக்கலை வீதியில் ஒருவர் மீது மோதிய பேருந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார தெரிவித்தார். கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென…
பல குறைபாடுகள் மற்றும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 23 ஆம் நுவரெலியா, ஹக்கலை வீதியில் ஒருவர் மீது மோதிய பேருந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து அன்று ஹக்கலை தாவரவியல் பூங்காவிற்குச் சுற்றுலா சென்ற பாடசாலைக் குழந்தைகள் குழுவை ஏற்றிச் சென்றது. ஹக்கலை வெலிமடை வீதியின் சரிவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இரத்தினபுரி பகுதியிலிருந்து இதே போன்று சுற்றுலா பயணத்தில் வந்த ஒருவர் மீது பேருந்து மோதி, அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பேருந்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும், பேருந்து நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளரின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.பேருந்தை ஆய்வு செய்தபோது தரமற்ற மற்றும் அபாயகரமான வாகன உதிரி பாகங்கள் கொண்டு அது மாணவர் பேருந்தாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததும், பேருந்தில் பிரேக்குகளுடன் மூன்று சக்கரங்கள் மட்டுமே இருந்ததும், கை பிரேக் அமைப்பு செயல்படாமல் இருந்ததும், பேருந்தின் டயர்கள் தேய்ந்திருந்ததும் தெரியவந்தது.மேலும் ஒவ்வொரு சக்கரத்திலிருந்தும் ஒரு நட்டு அகற்றப்பட்டிருந்ததும், பிரேக் பூஸ்டர் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததும், கால் வைக்கும் பலகைகள் கத்தி போல தேய்ந்து சேதமடைந்திருந்ததும், கேபினட் கண்ணாடி மாற்றியமைக்கப்பட்டிருந்ததால் விபத்தில் கண்ணாடி உடைந்ததும் தெரியவந்தது. பேருந்து தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டதுடன், பேருந்தில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்து மற்றொரு ஆய்வுக்கு உட்படுத்துமாறு அதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

