நாம் சமூக வலைத்தளங்களில் கடந்து சென்றாலும், நம் மனதைவிட்டு நீண்ட காலம் நீங்காத சில புகைப்படங்கள் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ அத்தகைய ஒரு தருணத்தைக் காட்டுகிறது: ஒரு சிறுவன் தனது தங்கை தன் கைகளில் தாங்கியவாறு, பெற்றோரைத் தேடி அழிந்த…
நாம் சமூக வலைத்தளங்களில் கடந்து சென்றாலும், நம் மனதைவிட்டு நீண்ட காலம் நீங்காத சில புகைப்படங்கள் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ அத்தகைய ஒரு தருணத்தைக் காட்டுகிறது: ஒரு சிறுவன் தனது தங்கை தன் கைகளில் தாங்கியவாறு, பெற்றோரைத் தேடி அழிந்துபோன பகுதிகளின் ஊடாக நடந்து செல்கிறான்.
நேபாளம் தனது வரலாற்றில் மிகவும் கடுமையான வெள்ளப் பேரழிவை எதிர்கொண்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர். மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதேவேளை, குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றன. பல குடும்பங்களைப் பொறுத்தவரை, வெள்ள நீர் வடிந்தாலும் இந்தப் பேரழிவு முடிவுக்கு வரவில்லை. காணாமல் போன பெற்றோர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றொரு வகையான துயரமாக மாறியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த இந்தச் சகோதர, சகோதரிகளின் வீடியோவானது, 1988 ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமான ‘Grave of the Fireflies’ (கரேவ் ஒப் தி ஃபயர்ஃபிளைஸ்) உடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
உலகப் போரால் தங்கள் உலகம் அழிக்கப்பட்ட பிறகு செய்டா மற்றும் செட்சுகோ என்ற சகோதர, சகோதரிகள் உயிர்வாழப் போராடும் அந்தத் துயரமான திரைப்படத்தை இது நினைவுபடுத்துகிறது. சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவை – நேபாளம் இயற்கைப் பேரழிவை எதிர்கொள்கிறது, அதே நேரத்தில் அத்திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது – என்றாலும், அவற்றுக்கிடையேயான உணர்வுபூர்வமான ஒற்றுமையை எளிதில் கடந்து செல்ல முடியாது.

