ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும், அமெரிக்கா அதனை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. செங்கடல் மற்றும் ஈடன் வளைகுடா போன்ற இடங்களில் ஈரான் மற்றும் ஹவுதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற…

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,  அமெரிக்கா அதனை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

செங்கடல் மற்றும் ஈடன் வளைகுடா போன்ற இடங்களில் ஈரான் மற்றும் ஹவுதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவினால் உருவாக்கப்பட்ட 14 நாடுகள் கொண்ட அணியிலும் அமெரிக்கா இல்லை.

அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவும் துருக்கியும் பாகிஸ்தானும் இணைந்து அமெரிக்கா இல்லாத ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.

இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வந்த நேட்டோ, ஈரான் மீதான அமெரிக்காவின் தற்போதைய யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

வளைகுடா களமுனையில் அமெரிக்கா ஏன் தனித்து நிற்கிறது? என்ன நடந்தது அமெரிக்காவிற்கு? இது தொடர்பில் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்..