1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை றீச்சாவில் கண்டு வியந்ததாக பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் தர…

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை றீச்சாவில் கண்டு வியந்ததாக பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் தரிசு நிலமாய்க் கிடந்த நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும் எண்ணி வியந்தேன் எனவும் அவர்  புகழுரைத்துள்ளார். 40 ஆண்டுகள் ஆசை நிறைவேறல் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்ற எனது ஆசை 40 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது.நேற்று யாழ். மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரனின் (தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா) அன்பு அழைப்பினை ஏற்று, இயக்கச்சியில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha” இயற்கை வேளாண் பூங்காவிற்குப் போயிருந்தேன். தரிசு நிலமாய்க் கிடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன்.றீச்சாவின் தோற்றம் வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.அத்துடன் தேச எல்லைகளை கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், 5 நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டு கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும் அந்த இடம்மாற்றப்பட்டிருந்தது.மேலும் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். வெகு விரைவில் யாழ். மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென வாழ்த்தி விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.