ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது, இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தின…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது, இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் (16.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதுஅவர் மேலும் தெரிவிக்கையில், இலஞ்ச ஊழல், கொலை கலாச்சாரம் அற்ற நிர்வாக அலகு இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது. இந்த அரசு 20 வருடத்துக்கு நீடிக்கும் என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் ஆடை விவகாரத்தில் சுகாதார சுற்றுநிருபங்களின் படியே செயல்பட்டுள்ளார். இதை சில அரசியல்வாதிகள் பூதாகரமாக்கி கலாச்சாரப் பிரச்சினையாக திசை திருப்பி தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்த முற்சிக்கிறார்கள்.வைத்தியர் சுகுணன் பதவி விலகக் கோர முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் யார்?
இதை சில அடிவருடிகள் மற்றும் சிறைக்கு செல்லவுள்ளவர்கள் தங்களை பாதுகாப்பற்கு இந்த அரசாங்கத்தை கைப்பற்ற இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றனர்.குற்றச்சாட்டுஎனவே இந்த இருவருக்கும் எந்தத் தகுதியும் இல்லை. வைத்தியர் சுகுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து ஓட்டமாவடியில் தமிழ் மக்களின் காளி கோயிலை இடித்து மீன் சந்தை, பள்ளிவாசல் கட்டியதுடன், தனது அதிகாரத்தை வைத்து நீதவானை இடமாற்றம் செய்தமை, ஏறாவூர் ஐயங்கேணியில் சுப்பிரமணியம் சிவானந்தராஜாவிக்கு சொந்தமான தனியார் காணியான 26 ஏக்கர் காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தி பள்ளிவாசல் அமைத்து முஸ்லிம் மக்களை குடியேறியதுடன், புனானையில் தமிழர்களின் 500 ஏக்கர் காணியை கையகப்படுத்தி பல்கலைக்கழகம் அமைத்துள்ளார்.இந்த மோசடிகள் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வெளி கொண்டு வரவேண்டும்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை, ஹிஸ்புல்லா சந்தித்துள்ளார். இருவருக்கும் என்ன தொடர்பு? சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
ஹிஸ்புல்லா மற்றும் அவரது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி சட்டத்தின் ஊடாக உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்












