அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் ஓடிய பின்னர், அவற்றின் தரப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும…

அனைத்து பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் ஓடிய பின்னர், அவற்றின் தரப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் கோளாறுகளும்; காரணமாக அமைந்திருந்தன.

இத்தகைய பின்னணியில், வாகனங்களின் கோளாறுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசாங்கத்தால் புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதன் மூலம் தனியார் பேருந்து தொழிலை சீரழிக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.