சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.அந்த உரையாடலில் கோட்டாபய ராஜபக்ச இரு ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.மேலு…

சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.அந்த உரையாடலில் கோட்டாபய ராஜபக்ச இரு ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.மேலும் இராணுவத்தில் 20 வருடங்கள் சேவை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடலை சான் கனேகொட என்பவரே  நடத்தியுள்ளார்.குறித்த தொலைபேசி உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்...தொலைபேசி உரையாடலிலுள்ள விடயங்கள்நபர்:ஹலோ ஹலோ கோட்டாபய சேரா? உங்களுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்து கிடைக்கிறது என்று நாட்டிற்குச் சொல்லுங்கள்.

கோட்டா: என்னுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்தா? 90-லிருந்து.

நபர்: 91 ஆம் ஆண்டு நீங்கள் விலகிப் போனீர்கள் அல்லவா மெடிக்கல் லீவ் போட்டு?

கோட்டா: என்ன பைத்தியக்காரத்தனம் இது? நான் மெடிக்கல் எதுவும் போடவில்லை. நான் 20 ஆண்டுகள் வேலை செய்தே ஓய்வு பெற்றேன். இராணுவத்திலிருந்து மெடிக்கல் போனது தவறான தகவல்கள்....அப்படியென்றால் யார் மெடிக்கல் போட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்? நான் மெடிக்கல் போடவில்லை. வேண்டுமானால் போய் ஆர்மி ஹெட் குவாட்டஸில் இதை கேட்டுப் பாருங்கள். நபர்: அப்படியென்றால் ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கான சம்பளத்தை நீங்கள் பெற்றுக்கொள்வதில்லையா? கோட்ட:ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சம்பளமும் தருகிறார்கள். அதுவல்ல விடயம். என்னுடைய பெரிய சம்பளம் இராணுவத்தில் தான் இருக்கிறது.

நபர்: லெப்டினன்ட் கர்னல் தரத்தின் கீழான ஓய்வூதியம்.கோட்டா:ஆமாம்.நபர்: அப்படியென்றால் ஜனாதிபதி என்ற முறையிலும் பென்ஷன் எடுக்குறீர்கள் தானே?

கோட்டா: ஆமாம்.நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்...

நபர்: அது சரி ,சரி. நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் தானே உங்களுடைய பென்ஷனும் வழங்கப்படுகிறது? ஜனாதிபதி பென்ஷனை எடுப்பதற்கு நீங்கள் தகுதியானவரா? நாட்டிற்கு நீங்கள் என்ன சேவை செய்தீர்கள்? கோட்டா:அது எனக்குத் தெரியாது. அதை நீங்கள் தீர்மானியுங்கள்.

நபர்: நாட்டை வக்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றதற்காகவா பென்ஷன் கொடுக்கிறார்கள்?

கோட்டா: நான் வக்குரோத்து நிலைமைக்கு தள்ளவில்லை. அரகலய போராட்ட காரர்களே அவ்வாறு செய்தனர்..

நபர்: போராட்டக்காரர்கள் இல்லையே முழு நாடுமே வீதிக்கு இறங்கியது.

கோட்டா:சரி அது வேறொரு கதை. நீங்கள் இராணுவத்தில் வேலை செய்திருக்கிறீர்களா?

நபர்:நான் இராணுவத்தில் வேலை செய்யவில்லை.

கோட்டா: 20 ஆண்டுகள் இராணுவத்தில் வேலை செய்வது என்பது இலேசான காரியமா?

நபர்:எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்கள்? 91லா?

கோட்டா: 20 ஆண்டுகள் 90களில் அல்ல 70 ஆம் ஆண்டிலிருந்து. அது உங்களுக்கு தெரியாதா?

நபர்: முதலில் ரைபிள் அணிக்கு சென்று அதற்குப் பிறகு சிங்க ரெஜிமென்ட்டிற்குச் சென்று அதற்குப் பின்னர் ஜீஆருக்கு வந்தீர்கள்.

கோட்டா:ஆமாம் அதை மட்டும் கேட்காதீர்கள் நான் என்ன செய்திருக்கிறேன் என்று போய் பாருங்கள். குறைந்தபட்சம் அதற்காவது ஒரு மரியாதை இல்லையா?

நபர்: மரியாதை இருக்கிறது.

கோட்டா:எனக்குத் தொந்தரவு செய்யாதீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன் தயவுசெய்து என்னிடம் பேசாதீர்கள்...

நபர்:இல்லை நீங்கள் பொதுமக்களின் வரிப்பணத்தில் தானே பென்ஷன் எடுக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.

கோட்ட: அது என் வேலை இல்லை.நான் 20 வருடங்கள் இராணுவத்தில் கடுமையாக கஷ்டப்பட்டு எடுத்த பென்ஷன்.சும்மா நீங்கள் வரிகள் பற்றி கதைக்க வேண்டாம்.