இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒ…

இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தரும் போது இலங்கை பொருளாதாரம் மேம்பாடு அடைவதும் அதன்பிறகு நீண்ட காலத்தில் சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தந்ததால் எந்த விதமான பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் ஒரு ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும், இந்த அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த கால அரசாங்கங்களும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய நன்மையை இலங்கைக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.