சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித…

சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்புஇந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும். அரங்கேறும் குழப்பங்கள்மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.