தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியாகிய ஊடக அறிக்கைகளைத் திருத்தியமைக்கும் வகையிலேயே அரசாங்கம்…
தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியாகிய ஊடக அறிக்கைகளைத் திருத்தியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.தற்போது காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, இச்சேவையைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக மட்டுமே பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையின் பங்குதாரர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு இறுதி உடன்பாட்டிற்கு வரத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய உரிம நிபந்தனைகளின் கீழ் ஒழுங்குமுறை உத்தரவொன்றைப் பிறப்பிக்க TRCSL நடவடிக்கை எடுக்கும் என்றே பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, 'செப்டம்பர் மாத இறுதி' என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவே தவிர, அது MNP சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி அல்ல என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், இந்தச் சேவையை கூடிய விரைவில் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





-558592_850x460.jpg)
-558570_850x460.jpg)





